Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 31தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒருமுறை கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இந்தக்கோரிக்கை நேற்று விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்துள்ள இந்த கைதுகள் இயல்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் கச்சத்தீவை மீண்டும் பெறுவது குறித்து தமது நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது நிலைப்பாட்டுக்கு மீனவ சமூகத்திடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com