Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து ஆயுத போராட்டத்தை புதுப்பிக்கக் கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் இப்போது பயங்கரவாதிகள் இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எனினும், மீண்டும் நாம் பயங்கரவாதத்தை காண்போமோ?, என தான் ஐயம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com