Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த கால ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை முறியடிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்தக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி விசாரணைகளைத் தடுக்கும் நோக்கத்துடனேயே அரசியலமைப்பு சபை நியமிக்கப்படுவதை முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டாலே ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும். புதிய ஆணைக்குழு நிறுவப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பு சபையை நியமிக்கும் முயற்சிகள் ராஜபக்ஷ குழுவினரால் பாராளுமன்றத்தில் குழப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகள் தோற்கடிக்க வேண்டும்: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com