Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கமே பதவியிலிருக்கும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளதாவது, “தேசிய அரசாங்கம் தொடர்பில் எந்தவித ஒப்பந்தங்களும் இல்லை எனவும், அவ்வாறு இருந்தால் அதனை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு தற்போதைய எதிர்கட்சி தலைவர் கூறுகின்றார். நிமல் சிறிபாலடி சில்வா தொடர்பில் நான் ஆச்சரியப்பட போவதில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு இல்லை. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பகுதியிலேயே நிமல் சிறிபாலடி சில்வா உள்ளார், ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது மைத்திரிபால சிறிசேன என்பதை நிமல் சிறிபாலடி சில்வா மறந்து விட்டார்.” என்றுள்ளார்.

0 Responses to இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்: சஜித் பிரேமதாஸ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com