Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் அதிக அளவில் விதவைகள் உள்ள மாநிலமான வாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைக்க ஐநா அனுமதி அளித்துள்ளது.

வாரணாசியில் உள்ள விதவைகள் பிழைக்க வழியின்றி, வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்று, வாரணாசியில் உள்ள விதவைகளுக்கு உதவி செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்ட நிலையில் அந்த தொண்டு நிறுவனத்துக்கு ஐநா அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து தொண்டு நிறுவனம் வாரணாசியில் உள்ள விதவைப் பெண்களுக்கு அழகுக் கலை, தையல் கலை, சிகை அலங்காரம்,தறி நெய்தல் என்று பல்வேறு கலைகளை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைக்க தொண்டு நிறுவனம் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to வாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவிக்கு ஐ.நா அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com