Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக் கட்டுவதற்கு கேரள அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு அனுமதிக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்தத்தை பரிசீலிக்க வேண்டாம் என்றும், உச்ச நீதிமன்றத்தில் இதுக்குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது பரிசீலனை செய்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகிவிடும் என்றும் குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா.

எனவே, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு முல்லைப் பெரியாறு அணைக் குறித்த கேரளாவின் கடிதத்தை பரிசீலிக்காமல் திரும்ப அனுப்ப, பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் ஜெயலலிதா.

0 Responses to பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com