Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை நண்பல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கலந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக் கூடியதும், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது.

வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் தொடர்பாக எடுக்க வெண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.

இவை சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இவ்வுரையாடல்களை நடாத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளார்.

0 Responses to நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் மைத்திரி- த.தே.கூ பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com