Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் பாதுகாப்பு கடமைக்கு என அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனமொன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை ஒரு தொகுதி கஞ்சா போதைப்பொருள் மதுவரி இலாகா அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்திலுள்ள முலகொல என்னுமிடத்தில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தின் போது வாகன சாரதி மட்டுமே வாகனத்தில் இருந்துள்ளார். வாகன சாரதியான மாகாண சபை ஊழியரொருவர் மதுவரி இலாகா அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, கேகாலை பதில் நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு இரகசிய தகவலொன்று கிடைத்திருந்ததாக மதுவரி இலாகா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து குறித்த இடத்தில் மதுவரி இலாகா புலனாய்வு பிரிவினர் மறைந்திருந்து வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது சுமார் 3 கிலோ கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை பொலிஸுக்குரிய இந்த வாகனம் முதலமைச்சரின் பாதுகாப்பு கடமைகளுக்காக பாவனைக்காக விடுவிக்கப்பட்டிருந்தது.

0 Responses to சப்ரகமுவ முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் கஞ்சா கண்டுபிடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com