Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. இதனால் அவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வாடும் நிலை உருவாகியுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவைக்கு யோசனைத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்புக் கொடுத்தால், இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களையும் நீக்கி அவர்களையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை நிராகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com