ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்வால் ஜென்கா இலங்கைக்கான நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
மிரொஸ்வால் ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும். அத்துடன், அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.
கொழும்பில் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
மிரொஸ்வால் ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும். அத்துடன், அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.
கொழும்பில் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.




0 Responses to ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் இலங்கை வருகை!