1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது போல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் கருத்துக்களை புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்வாங்காது விட்டால், அது அர்த்தமற்றதாகிவிடும் என்று ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை மறு சீரமைப்பதற்குரிய உகந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளமையால், காலத்தை வீணடிக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலம், அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். தற்போது நிலவும் உறவுகள் பிளவடையலாம் அல்லது புது உறவுகள் உருவாகலாம். எதுவாக இருப்பினும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையுமா? என்பது சந்தேகம் என்பதனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை தவறவிட்டுவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை அரச ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியலமைப்பினை மறுசீரமைப்பது குறித்து மிகுந்த ஆர்வமாக உள்ளார். என்றபோதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி வெளிநடப்பு செய்யாத வகையில் அவர்களை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருந்த 20வது திருத்தம் பொதுத் தேர்தலுக்கு குறுகிய இடைவெளிக்கு முன்னர் பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட்டதனாலேயே அது வெற்றிபெற முடியாமல் போனது. சர்வதேச உடன்படிக்கைகள் ஆகக் கூடியது 05 வருடங்களுக்குள்ளாயினும் உள்நாட்டில் சட்டமாக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகின்றேன.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து நாடு முழுவதும் ஆராயும் வகையிலான குழுவொன்று உத்தியோகபூர்வமாக நிறுவப்படுவது அவசியம். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வரை இது தொடர்பில் காத்திராமல் தனிநபர்களும் அமைப்புக்களும் தமது கருத்துக்களை தற்போது முதல் வெளியிட ஆரம்பிக்க வேண்டும்.” என்றுள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை மறு சீரமைப்பதற்குரிய உகந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளமையால், காலத்தை வீணடிக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலம், அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். தற்போது நிலவும் உறவுகள் பிளவடையலாம் அல்லது புது உறவுகள் உருவாகலாம். எதுவாக இருப்பினும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையுமா? என்பது சந்தேகம் என்பதனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை தவறவிட்டுவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை அரச ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியலமைப்பினை மறுசீரமைப்பது குறித்து மிகுந்த ஆர்வமாக உள்ளார். என்றபோதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி வெளிநடப்பு செய்யாத வகையில் அவர்களை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருந்த 20வது திருத்தம் பொதுத் தேர்தலுக்கு குறுகிய இடைவெளிக்கு முன்னர் பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட்டதனாலேயே அது வெற்றிபெற முடியாமல் போனது. சர்வதேச உடன்படிக்கைகள் ஆகக் கூடியது 05 வருடங்களுக்குள்ளாயினும் உள்நாட்டில் சட்டமாக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகின்றேன.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து நாடு முழுவதும் ஆராயும் வகையிலான குழுவொன்று உத்தியோகபூர்வமாக நிறுவப்படுவது அவசியம். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வரை இது தொடர்பில் காத்திராமல் தனிநபர்களும் அமைப்புக்களும் தமது கருத்துக்களை தற்போது முதல் வெளியிட ஆரம்பிக்க வேண்டும்.” என்றுள்ளார்.




0 Responses to தமிழர்களின் கருத்துக்களை உள்வாங்காது விட்டால், அரசியலமைப்பு சீர்திருத்தம் அர்த்தமற்றதாகிவிடும்: ஜயம்பதி விக்ரமரட்ன