Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தினை இலங்கை மீது ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா, இது குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடுவார். நிச்சயமாக நாம் எப்போதும், பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். தொடர்ந்தும் அதற்கு அழுத்தம் கொடுப்போம்.” என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவோம்: ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com