Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்கின்றன என்று,ரஷ்ய அதிபர் விளாடிமின் புடீன் அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளார்.

கடந்த வாரம் ஃபாரீசில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் மனித வெடிக்குண்டு மூலம் கடும் தாக்குதல் நிகழ்த்தியது. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் ரஷ்யாவும் கைக்கோர்க்க உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடீன் தெரிவித்தார். அப்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஜி 20 கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் உட்பட 40 நாடுகள் நிதியுதவி செய்கின்றன என்கிற அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார்.

அதாவது, ஐஎஸ்ஐஎஸ்இயக்கம் கள்ளச் சந்தையில் விற்கும் கச்சா எண்ணெயை இந்த 40நாடுக்களும் மலிவு விலைக்கு வாங்கிப் பயன் பெறுகின்றன என்றும், ஐஎஸ்ஐஎஸ் இப்படி பணம் வருவதை தடுத்தால் மட்டுமே அந்த இயக்கத்தை ஒழிக்க முடியும் என்றும் புடீன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்கின்றன: புடீன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com