Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது காலம் கடந்த ஒன்று. அந்தக் சட்டத்தை நீக்கிவிட்டு தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான மற்றும் சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டம் காலம் கடந்த ஒன்று; அது நீக்கப்படும்: இலங்கை அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com