Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி முனைப்புக்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வாழ்வாதாரம், ஏனைய கருத்திட்டங்கள், கைத்தொழில் அபிவிருத்தி உள்ளடங்களான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு- கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் டி.எம்.சுவாமிநாதனுடன் த.தே.கூ பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com