Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

பதிந்தவர்: தம்பியன் 24 February 2016

வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில அமைப்புகள் இரு மணி நேரம் கடை, பாடசாலைகள் அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. எனினும் ஏனைய அமைப்புக்கள் முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

0 Responses to வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com