Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு பகுதியிலுள்ள ஊடகவியலாளர்களின் குறை நிறைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவும், நட்புறவை வளர்ப்பதற்குமான விஜயமொன்றை தெற்கு ஊடகவியலாளர்கள் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தெற்கு ஊடகவியலாளர்களின் வடக்கு நோக்கிய விஜயம் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இந்தக்குழு யுத்தத்தால் உயிரிழந்த மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் தமது தொழிலை முன்னெடுப்பதில் வடக்கு ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும், அவர்களின் நலன்புரிகள் குறித்து அறிந்துகொள்வதற்கும் இந்தப் பயணம் வழிவகுக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்திருந்த 'டிஜிட்டல் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தின் செயற்பாடு' எனும் தலைப்பிலான செயலமர்வில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் தெற்கு ஊடகவியலாளர் வடக்கு விஜயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com