Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு அரசாங்கம் புதிய பொறிமுறையை உருவாக்க தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தவுடன் தமது ஆணைக்குழுவின் கடமை நிறைவடைந்துவிடும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

0 Responses to பரணகம ஆணைக்குழு ஜூலை 15ஆம் திகதியோடு காலாவதியாகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com