Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' எனும் பம்பைமடு தடுப்பு முகாம் அனுபவங்கள் தொடர்பிலான நூல் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 09.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது.

போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி தன்னுடைய அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்கிற மறைந்த சிவகாமி எழுதிய நூலொன்றும் அண்மையில் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to 'ஆறிப்போன காயங்களின் வலி' முன்னாள் போராளியின் தடுப்பு முகாம் அனுபவங்கள் நூல் வெளியீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com