Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ராஜீவ் கோலை வழக்கில் நளினி ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார். 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதி,மன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நளினியின் விடுதலைக் கோரிக்கை மனுக் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதுக் குறித்து வருகிற 27ம் திகதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனுவின் மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com