Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆறு கோடியே 53 லட்சம் மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐநா அறிவித்துள்ளது.

 ஒவ்வொரு ஆண்டிலும் பல்வேறு நாடுகளின் அகதிகள் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைவதுக் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதன் படி பார்க்கையில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவு கடந்த ஆண்டில் 6 கொடியே 53 லட்சம்மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வெவேறு நாடுகளுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர் என்று ஐநா கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.இந்த அகதிகள் தங்கள் நாடுகளில் நிலவும் வறட்சி காரணமாகவோ அல்லது வறுமை காரணமாகவோ அல்லது போர் காரணமாகவோ தங்கள் நாடுகளில் வசிக்க விரும்பாமல் வேற்று நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டை விட கடந்த ஆண்டு 58 லட்சம் அகதிகள் அதிகரித்து உள்ளனர் என்றும், இதுக்குறித்து சர்வதேச நாடுகள் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஐநா அறிவுறுத்தி உள்ளது.

0 Responses to கடந்த வருடத்தில் ஆறு கோடிக்கும் மேல் அகதிகள்: ஐநா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com