இந்தோனேசியாவின் அச்சே மாகாணக் கடற்பரப்பில் தத்தளிக்கும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு கோரி இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கடிமொன்றை எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தோனேசியாவின் அச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்களின் நிலைமையை கவனத்திலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இந்தோனேசியா அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என்றும், அப்படி செல்கின்றவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளாக ஏற்றுக் கொள்ளாது என்றபோதும், ஆட்கடத்திலில் ஈடுபடுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி எமது மக்கள் தமது பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் விற்றும், பெருந்தொகையான கடன்களை வாங்கியும் ஆபத்தான கடல்வழிப் பயணத்திற்கு தயாராகின்றார்கள்.
எனவே, படகில் பயணம் செய்து கடலில் பல ஆபத்துக்களை சந்தித்து இந்தோனேசிய கடற்பரப்பை அடைந்திருக்கின்றார்கள். இப்படியாக ஆபத்தான கடற்பயணத்தை செய்தவர்களில் பல ஆயிரம்பேர் கடலிலேயே பலியாகிப் போயிருக்கின்றார்கள். பலர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்து அகதிளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே எமது மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும், அத்தியாவசிய உதவிகளையும் இந்தோனேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தோனேசியாவின் குடியகல்வு சட்டங்களை மீறியும் ஆட்களை பொய் வாக்கறுதிகளைக் கூறி அழைத்துவந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகவும், அதற்குத் துணையாக செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கம் எடுக்கவேண்டும். ஆனால் கடலில் தத்தளிக்கும் எமது மக்களின் அவலத்தையும், அழுகையையும் மனிதாபிமான ரீதியாகவே அணுகவேண்டும்.” என்றுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தோனேசியாவின் அச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்களின் நிலைமையை கவனத்திலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இந்தோனேசியா அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என்றும், அப்படி செல்கின்றவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளாக ஏற்றுக் கொள்ளாது என்றபோதும், ஆட்கடத்திலில் ஈடுபடுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி எமது மக்கள் தமது பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் விற்றும், பெருந்தொகையான கடன்களை வாங்கியும் ஆபத்தான கடல்வழிப் பயணத்திற்கு தயாராகின்றார்கள்.
எனவே, படகில் பயணம் செய்து கடலில் பல ஆபத்துக்களை சந்தித்து இந்தோனேசிய கடற்பரப்பை அடைந்திருக்கின்றார்கள். இப்படியாக ஆபத்தான கடற்பயணத்தை செய்தவர்களில் பல ஆயிரம்பேர் கடலிலேயே பலியாகிப் போயிருக்கின்றார்கள். பலர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்து அகதிளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே எமது மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும், அத்தியாவசிய உதவிகளையும் இந்தோனேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தோனேசியாவின் குடியகல்வு சட்டங்களை மீறியும் ஆட்களை பொய் வாக்கறுதிகளைக் கூறி அழைத்துவந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகவும், அதற்குத் துணையாக செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கம் எடுக்கவேண்டும். ஆனால் கடலில் தத்தளிக்கும் எமது மக்களின் அவலத்தையும், அழுகையையும் மனிதாபிமான ரீதியாகவே அணுகவேண்டும்.” என்றுள்ளார்.




0 Responses to தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்; இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!