Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பதி திருமலாவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கு மிகவும் பதற்றம் ஏற்ப்பட்டு உள்ளது.

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம். தினமும் லட்சக் கணக்கான லட்டுக்கள் இங்குள்ள மடத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் பூந்தியாகத் தயாரிக்கப்பட்டு, கன்வேயர் பெல்ட் மூலம் வேறு இடத்துக்கு வந்து அங்கு லட்டு பிடிக்கப்படும். பூந்தித் தயாரிக்கும் இடத்தின் கூரையில் திடீரென பிடித்தத் தீ காற்றின் காரணமாக பல இடங்களில் பரவியது.

உடனடியாக 3 தீயணைப்பு வண்டி வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் யாருக்கும் தீக்காயம் கூட ஏற்படாத நிலையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மட்டும் சேதமாகி உள்ளன.

0 Responses to திருப்பதி திருமலாவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com