Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில கடும்போக்காளர்கள் பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ஒருபோதும் பாதிப்படையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் நேற்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, "யாழ். துரையப்பா விளையாட்டரங்கை இந்தியப் பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பதில் மகிழ்சியடைகின்றேன். இதன் முழுமையான புனர்நிர்மாணச் செலவையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியப் பிரதமருக்கும் - இந்திய மக்களுக்கும், இலங்கை அரசு சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை - இந்திய நட்புறவில் இது முக்கியமான தருணம். இலங்கை - இந்திய நட்புறவு சரித்திர காலம் முதல் இருந்து வருகின்றது. இன்றைய நிகழ்வு முக்கியமானது. நாளை (இன்று) பொசன் தினம், இது பௌத்தர்களுக்கு முக்கியமான நாள். இந்தியாவினால்தான் இலங்கைக்கு பௌத்த தர்மம் கிடைக்கப் பெற்றது.

எமது நாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவி நீண்ட காலமாக கிடைத்து வருகின்றது. இந்த நாட்டில் நீண்ட காலம் போர் நிலவியது. அதன் பின்னர் சமாதானம் ஏற்பட்டது. சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்தியா பல உதவிகளைச் செய்து வருகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கம் காணப்படுகின்றது. இதற்காக நாங்கள் தியாக உணர்வுடன் பணிபுரிகின்றோம்.

எங்களுடைய இரண்டு நாடுகளினதும் முன்னேற்றத்துக்காக நாங்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றோம். அதற்கு சில கடும்போக்காளர்கள் பலவிதமான விடயங்களைச் சொன்னாலும், நாங்கள் சர்வதேச ரீதியாக இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

ஒரு விளையாட்டரங்கு என்பது தேசிய நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கியமான இடமாகும். இன - மதம் எல்லாவற்றையும் விடுத்து ஒன்றுகூடும் இடமாகும். எனவே, இது நல்லிணக்கத்துக்கு முக்கியமான அடையாளம் ஆகும்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ஒருபோதும் பாதிப்படையாது: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com