Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று இளம் பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை ஈஷா மையத்தில் லண்டனில் படித்த தங்களது இரு மகள்களும் பயிற்சிக்கு என்று சென்றனர் என்று பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், 3 மாத பயிற்சி என்று சென்ற தங்களது  பெண்களை கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும், வெளியில் விடாமல் அவர்களை துறவிகளாக மொட்டையடித்து மையத்தினுள் வைத்துள்ளார்கள் என்று அந்த புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது மகள்களுக்கு மையத்தில் போதை பொருள் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், தாங்கள்  சந்திக்க சென்றாலும், உணவுப் பொருட்கள் எதுவும் கொடுத்தாலும் அவர்கள் தங்களை அங்கு அனுமதிப்பதில்லை என்றும் பெற்றோர் குமுறலுடன் கூறி உள்ளனர்.

இதையடுத்து பெண்கள் இருவரும் வாட்ஸாப் மூலம் பெற்றோருக்கு தங்கள் விரும்பித்தான் இந்த துறவறம் பூண்டதாக தெரிவித்தனர் எனினும்அந்த இரு இளம் பெண்களான கீதா மற்றும் லதாவிடம் மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். ஈஷா மையத்தில் 2 பெண்களும் மூளைச்சலவை செய்யப்பட்டனரா என மாவட்ட எஸ்பி ரம்யா பாரதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 Responses to தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று பெற்றோர் புகார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com