உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய போரில் போராளிகள், பொதுமக்கள் என இலட்சக் கணக்கானோர் தம்முயிரை அர்ப்பணித்துள்ளனர். அவ்வாறு உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மனங்களுக்கும், ஆன்மாக்களுக்கும் ஆறுதல் தரும் விடயமாகும்.
மத நம்பிக்கை கொண்ட மக்கள் உயிர்நீத்த உறவுகளின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், ஈமைக்கடன் செய்வதும் அவரவர் நம்பிக்கைக்கு உரியதாகும். எனவே, இதனை யாராலும் தடுக்க முடியாது. நாட்டின் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு கோவில்கள், வீடுகள், நீர் நிலைகள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துங்கள்.” என்றுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய போரில் போராளிகள், பொதுமக்கள் என இலட்சக் கணக்கானோர் தம்முயிரை அர்ப்பணித்துள்ளனர். அவ்வாறு உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மனங்களுக்கும், ஆன்மாக்களுக்கும் ஆறுதல் தரும் விடயமாகும்.
மத நம்பிக்கை கொண்ட மக்கள் உயிர்நீத்த உறவுகளின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், ஈமைக்கடன் செய்வதும் அவரவர் நம்பிக்கைக்கு உரியதாகும். எனவே, இதனை யாராலும் தடுக்க முடியாது. நாட்டின் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு கோவில்கள், வீடுகள், நீர் நிலைகள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துங்கள்.” என்றுள்ளார்.




0 Responses to உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் உரிமை: மாவை