தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன.
இந்த வகையில் லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை(25) தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில்முன்னாள் போராளி மாணவர்களான கோபி, பிரம்மி ஜெகன் ,மற்றும் சத்தியசீலன் தமிழ்வாணி போன்றோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப் போரினில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் அனுபவங்கள் அவர்கள் அனுபவித்த துயரங்கள் இராணுவத்தின் இனப்படுகொலையின் உச்சகட்ட போரினைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை கோபி அவர்கள் சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் Phil Miller உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை(25) தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில்முன்னாள் போராளி மாணவர்களான கோபி, பிரம்மி ஜெகன் ,மற்றும் சத்தியசீலன் தமிழ்வாணி போன்றோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப் போரினில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் அனுபவங்கள் அவர்கள் அனுபவித்த துயரங்கள் இராணுவத்தின் இனப்படுகொலையின் உச்சகட்ட போரினைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை கோபி அவர்கள் சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் Phil Miller உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.




0 Responses to மாவீரர் வார நிகழ்வு லண்டன் UCL பல்கலைக்கழகத்தில்..