தேசிய முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வைக்காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “13வது அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாது என கருதியிருந்த முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்;த ராஜபக்ஷ ஆகியோரும் 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் அதனை திருத்தியமைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. 2006ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ சர்வ கட்சி குழுவை கூட்டி நிபுணர் குழுவையும் நியமித்தார். இதனையடுத்து அந்த நிபுணர் குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றக் கூடிய வகையிலான பெரும்பான்மை பலம் இந்த அரசாங்கத்திற்கு இப்போது இருக்கின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதனை அவரின் கருத்துக்கள் மூலமே புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஒரு கருமத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது.” என்றுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “13வது அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாது என கருதியிருந்த முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்;த ராஜபக்ஷ ஆகியோரும் 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் அதனை திருத்தியமைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. 2006ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ சர்வ கட்சி குழுவை கூட்டி நிபுணர் குழுவையும் நியமித்தார். இதனையடுத்து அந்த நிபுணர் குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றக் கூடிய வகையிலான பெரும்பான்மை பலம் இந்த அரசாங்கத்திற்கு இப்போது இருக்கின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதனை அவரின் கருத்துக்கள் மூலமே புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஒரு கருமத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது.” என்றுள்ளார்.




0 Responses to ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு காண அனைவரும் இணைய வேண்டும்: சம்பந்தன்