Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றச்சாட்டு வைத்துள்ளார். சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர், என தீபா குற்றம் சாட்டினார்.

சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர். இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்டநிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர்.

இது குறித்து, தீபா கூறுகையில்,காவல் துறையினர், நான் கலந்து கொள்ளும், பொது நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி வழங்க மறுக்கின்றனர். காவல் துறையினர் மூலம்,என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர். சசிகலா கணவர் நடராஜன், சமீபத்தில், என்னை,தன் மகள்  போன்றவள் எனக் கூறியுள்ளார்.

0 Responses to போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது: தீபா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com