Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிச் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால், பணியிலிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். இக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, குடும்பத் தலைவரை இழந்து வாடும் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கி ஆறுதல் தெரிவித்தார். தமது இரு மகள்களுடனும் தலைமைச் செயலகத்துக்கு வந்த, வில்சனின் மனைவி, மகள்களிடம் ரூ. 1 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கினார்.

முதல்வருடனான சந்திப்பின் பின்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, " என் கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், எமது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை அளிப்பதாகவும், முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நிகழக்கூடாது. அதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.

0 Responses to இந்தக் கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது - சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மனைவி.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com