Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸின் பாரிஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பூமிக்கான மருத்துவக் காப்புறுதி என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பான் கீ மூன் தெரிவித்துள்ளதாவது, ”பாரிஸ் ஒப்பந்தம் உலக மக்களுக்கும், பொதுநலனுக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும். மாசு வெளியேற்றத்தைக் குறைக்கவும், தங்கள் நாடுகளில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை எடுப்பதுடன், பிற நாடுகளிலும் அது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், உலகின் ஒவ்வொரு நாடும் முதல் முறையாக வாக்குறுதி அளித்துள்ளன.

‘இனிவரும் தலைமுறையினரைக் காப்போம்' என்ற ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக, உலக நாடுகள் ஒருமித்த முனைப்புடன் சவால் மிக்க கடமையை ஏற்றுள்ளன. பாரிஸ் மாநாட்டு ஒப்பந்தம் மூலமாக அளித்த வாக்குறுதிகளை உலக நாடுகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பருவநிலை மாற்றம் தொடர்பிலான பாரிஸ் ஒப்பந்தம் பூமிக்கான மருத்துவக் காப்புறுதி: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com