Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 இன் சுவடுகள் ஜனவரி

புதுவருட தினத்தில் முரசுமோட்டையில் விமானக்குண்டு வீச்சு.

*அமைச்சரவையில் திடீர் மாற்றம் .ஊடகத்துறை ஜனாதிபதியை சந்திப்பு.

02 * கிளிநொச்சி படையினர் வசம்.

*விமானப்படை தலைமையகத்தின் முன்னால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்.

03 *கொழும்பில் பொலிஸ் பதிவு .

07 *புலிகள் மீது அரசாங்கம் தடை.

08 *சண்டேலீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கசுட்டுக்கொலை.

09 *ஆனையிறவு படையினர் வசம். முழுமையான கட்டுப்பாட்டில் .9 வீதி.

15 *இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டி தொல். திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம்.

16 *வன்னி மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு .சி.ஆர். சி யின் அவசர நிவாரண சேவைகள் ஆரம்பம்.

17 *140 தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியது.

20 *புதிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் இலங்கை இணக்கம். 22 *முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பு வலயத்துக்குள் வருமாறு படையினர் அழைப்பு.

23 *ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன், மற்றும் மனைவி மீது தாக்குதல்.

24 *முல்லைத்தீவு கல்மடுக்குள அணை புலிகளால் தகர்ப்பு.

25 * 13 வருடங்களின் பின் முல்லைத்தீவு நகருக்குள்படையினர் பிரவேசம்.

25 * இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை விஜயம்.

29 * மோதல் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு புலிகளுக்கு 48 மணித்தியால காலக்கெடு.

பெப்ரவரி

01 * இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம். 04 * சுதந்திர தினம். காலி முகத்திடலில் கோலாகல கொண்டாட்டம்.

05 * .சி.ஆர்.சி. தலைமையகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்.

08 * முல்லைத்தீவு, தர்மபுரம் இடைத்தங்கல் முகாமில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்.

12 * முல்லைத்தீவில் புதிய பாதுகாப்பு வலயம் பிரகடனம்.

15 * மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி. 20 * புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல். இறைவரித் திணைக்களக் கட்டிடம் சேதம். அவ் விமானங்கள் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

* அம்பலவன்பொக்கø பிரதேசம் படையினர் வசம்.

26 * பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது.

* கோல்டன் கீ நிதி மோசடியில் கொத்தலாவலவுக்கு விளக்கமறியல்.
மார்ச்

* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷநேபாளம் விஜயம்..

02 * படையினரின் போக்கு வரத்து நடவடிக் கைகளுக்காக 9 வீதி திறப்பு. .

03 * இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில்ஆயுததாரிகள் தாக்குதல். .

* புதுக்குடியிருப்பு சந்தி படையினர் வசம். .

06 * வன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அழைத்துவர இரு பாதைகள் அறிவிப்பு. .

08 * 7கோடி பெறுமதியுள்ள மருந்துப் பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை வருகை 09 * இன ஒருமைப்பாடு மற்றும் மறு சீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பதவி ஏற்பு. * 9 வீதியூடாக யாழ் குடாநாட்டுக்கு முதன்முறையாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு. .

10 * அக்குரஸ்ஸ ஜும்ஆ பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு, 15 பேர் பலி. அமைச்சர் மஹிந்த விஜயசேகர உட்பட 60 பேர் காயம். 13 * திருமலையில் கப்பம் கேட்டு 6 வயது சிறுமி வர்ஷா படுகொலை..

18 * சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புகாவல் உத்தரவு. 23 * யாழ் தேவி ரயில் சேவை அங்குரார்ப்பணம்
மார்ச்

* உலக செல்வந்தர் பட்டியலில் இலங்கை தமிழர்களான ஆனந்தகிருஷ்ணன் மற்றும் ராஜ் ராஜரட்ணம் ஆகிய இருவரும் உள்ளடக்கம். 02 * .நா.வின் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனித உரிமைகள் விவகார செயலாளரின் பிரதிநிதிபேராசிரியர் வோல்டர் கெலின் இலங்கை விஜயம். அகதி முகாம்களுக்கும் பயணம். ..

05 * பாதுகாப்பு வலயம் தவிர்ந்த சகல பகுதிகளும் படையினர் வசம். புலிகளின் 7 தலைவர்கள் உட்பட 250பேர் பலி

* கல்லடி பொலிஸ் போதனா பயிற்சிக் கல்லூரி அத்தியட்சர் துப்பாக்கிச் சூட்டில் பலி. ..

08 * இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டி லண்டன் மற்றும் டென்மார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 90 பேர் கைது. 10 * இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் உண்ணாவிரதம் ஆரம்பம். 13 * சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 48 மணி நேரம் மோதல் தவிர்ப்பு

15 * கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களில் நில நடுக்கம். ..

16 * ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாக கிளிநொச்சி விஜயம். ..

19 * விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எனது நண்பன் என முதல்வர் கருணாநிதி அறிவிப்பு. 20 * பாதுகாப்பு வலயத்துக்குள் தற்கொலைத் தாக்குதல்கள்

22 * இலட்சக்கணக்கான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகை. ..

* தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தயாமாஸ்டர்,ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இராணுவத்திடம் சரண். ..

23 * இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 6ஆறரை கோடி பெறுமதியான பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பிவைப்பு 24 * சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இரு மாதங்களின்பின் விடுதலை

* இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர்மேனன் இலங்கை விஜயம். ..

25 * புலிகளை மூன்றாம் தரப்பினரிடம் சரணடையுமாறு கோரிக்கை அமெரிக்கா, ஏற்க முடியாது என கோத்தபாயா அறிவிப்பு. ..

* இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஜி 8 நாடுகள் கூட்டாக கோரிக்கை. ..

* .நாவின் மனிதாபிமான மற்றும் உதவி இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு திடீர் விஜயம். ..

ஏப்ரல் 25

* மேல் மாகாண சபை தேர்தலில் ..சு.மு. மகத்தான வெற்றி ..

* இலங்கை பிரச்சினை தொடர்பில் ஜெனீவாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம். ..

26 * திருமலையில் மீனவர் உட்பட 9 தமிழர்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை

27 * இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி கருணாநிதி உண்ணாவிரதம். * மோதலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என படையினருக்கு அரவு உத்தரவு..

29 * பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் வவுனியா நலன்புரி முகாம்களுக்குவிஜயம்

மே

*மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய பிரிட்டன் குழு இலங்கை விஜயம். ..

06 * மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை அனுப்பு வதற்கு மோதல் இடைநிறுத்தம் அவசியம் என .நா.செயலாளர் கோரிக்கை. ..

08 * பாதுகாப்பு வலயத்தின் எல்லை களை மீள்நிர்ணயம் செய்து புதியபாது காப்புவலயம் பிரகடனம். *மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கருகில் துப்பாக்கிச் சூடு. ..

10 * திருமலையில் கைது செய்யப்பட்டசனல்4′ தொலைக்காட்சி ஊடகவியலா ளர்கள் மூவரும் நாடு கடத்தல்

14 *மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து .நா.பாதுகாப்பு சபையில்கடும் விசனம். ..

15* மோதல் இடம்பெறும் பகுதிகளில் மேற்கொண்டு வந்த மனிதாபிமானப் பணிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம். 17 *மண்ணை தொட்டு வணங்கி ஜனாதிபதி நாடுதிரும்பினார். ..

*முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியேற்றம். (2இலட்சத்து 49ஆயிரத்து 987பேர் பதியப்பட்டுள்ளனர்.)..

* வைத்தியர்களான வரதராஜா, சத்தியமூர்த்திஉட்பட 6 பேர் கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை. மேலதிக அரச அதிபர் பார்த்திபனும் முகாமில். * படையினரின் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலித்தேவன், நடே சன், ரமேஷ் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவிப்பு. ..

* யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு அறிவிப்பு. 19 * பிரபாகரனின் சடலம் மீட்பு. ..

* படையினரின் வெற்றி குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரை.

20 * வன்னிப் போர் முடிவுற்றமை வெள்ளமுள்ளிவாய்க்காலில் முரசு கொட்டி அறிவிப்பு.

* தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.பத்மநாதன் சென்னையில் மாரடைப்பால் மரணம்.

22 * படையினரை கௌரவிக்கும் வகையில் கொழும்பில் பேரணி. தேசிய கொடிகளை ஏந்தி கோஷம்.

* பிரபாகரன் உள்ளிட்ட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் படையினரால் அடக்கம்.

23 * ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இலங்கை விஜயம்.

24 * துட்டகைமுனுவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்த ஜனாதிபதி ஜயஸ்ரீ மகா போதியிலும் தரிசனம்.

28 * 4ஆவது ஈழப்போரை வெற்றி நிகழ்வு இராணுவ ஈழப்போரை வெற்றி நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஜூன்

01 * உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும்டகவியலாளருமான போத்தல ஜயந்த மீது தாக்குதல். 03 * யுத்த வெற்றி தொடர்பான தேசிய விழா காலி முகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

06 * 20 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.தேவி ரயில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை பயணம்.

* பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஓய்வு.

08 * 32ஆவது பிரதம நீதியரசராக ஜே..என். சில்வா பதவியேற்பு.

10 * இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனடா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

14 * ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு மியன்மாருக்கு விஜயம்.

19 * யாழ். குடா நாட்டு கடற்பரப்பில் 24 மணி நேரமும் மீன் பிடிப்பதற்கு அனுமதி.

25 * யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகள் ஆயுததாரிகளால் தீக்கிரை.

யூலை

03 * தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட 500 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முதலாளிமார் சம்மேளனத்தால் நிராகரிப்பு. அனைத்து கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்பட்டு 405 ரூபாவுக்கு இணக்கம்

09*பிரபாகரன் மரணம் குறித்து உத்தியோக பூர்வ அறிவித்தலை எதிர்பார்ப்பதாக இந்தியா அறிவிப்பு.

12* கூட்டுப்படைகளின் பிரதானியாக சரத் பொன்சேகா பதவி உயர்வு.

* இராணுவ தளபதியாக ஜகத் ஜயசூரியவும் கடற்படை தளபதியாக திசõரசமரசிங்கவும் நியமனம்.

* வடமாகாண ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜீ.. சந்திர சிறியும் மாலைதீவு தூதுவராக டிக்ஸ்ஸன்தேலவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு.

19 * யாழ்.படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் சில்வாவும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக வசந்த கருணாகொடவும் நியமனம்.

20 * சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றம்.

22 * யாழ் கொழும்பு பயணிகள் பஸ் சேவை 9 வீதி யூடாக மீண்டும் ஆரம்பம். * காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த செனவிரட்ன சுட்டுக்கொலை.

24 *உடதலவின்ன படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தால்

விடுதலை. 27 * சிறைத்தண்டனை அனுபவித்த படையினர் 1893 பேருக்கு பொது மன்னிப்புடன் விடுதலை.

ஆகஸ்ட்

01 * கிளிநொச்சி அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது. 06 * அமுத விழாவை நோக்கி வீரகேசரியின் பயணம். 80 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. * குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது

செய்யப்பட்டுள்ள தாக அரசாங்கம் அறிவிப்பு.

10 * ஊவா மாகாணசபை, யாழ் மாநகரசபை தேர்தலில்ஆளும் ..சு.மு. அமோக வெற்றி. 13 * மொரட்டுவ, அங்குலான பகுதிகளில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொலை. பிரதேசத்தில் பெரும் பதற்றம். பொலிஸார் மீதும் பெரும் தாக்குதல். 15 * மடு மாதா ஆலயத்தின் ஆவணித்திருவிழா.இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

* மஸ்கேலியாவை சேர்ந்த இரு தமிழ் யுவதிகள் கொலை.

17 * மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் நிறையுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது. 20 * வன்னியிலிருந்து 288938 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அரசு அறிவிப்பு.

31 * ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செப்டெம்பர்

01* தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் பிணையில் விடுவிப்பு.

28 * திறைசேரியின் செயலாளராக பி.பி.ஜயசுந்தர

ஒக்டோபர்

03 * இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டிவிசேட நிகழ்வுகள். கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இராணுவக் கண்காட்சி. 10 * தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்குழு இலங்கைக்கு விஜயம். 11 * தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி.

* இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள்குழு யாழ்ப்பாணம் விஜயம்.

15 * எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின்அமைச்சர்கள் மட்ட மாநாடு கொழும்பில்நடைபெற்றது.

17 * இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா பயணித்த படகினை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம். 20 * கோடீஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் கைது

21 * அம்பேபுஸ மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வுமுகாம்களிலிருந்து புனர்வாழ்வு பெற்று வந்த 168 முன்னாள் போராளிகள் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றம். * தெஹிவளை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறப்பு.

26 * விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சக உரிமையாளர் யசீகரனும் அவரது மனைவி மலர்மதியும் விடுதலை.

30 * பம்பலப்பிட்டி கடற்பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை. நவம்பர்

03 * அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொது கூட்டமைப்பான . தே. மு. உதயம்.

09 * அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுடன் சந்திப்பு.

11 * யாழிலிருந்து 9 வீதியூடாக அரச சொகுசு பஸ் சேவை ஆரம்பம்.

12 * முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமா. திடீர் முடிவுக்கு 17 காரணங்கள் தெரிவித்து கடிதம்.

* மியன்மார் தலைவர் தன்சூவின் இலங்கை விஜயம். 13 * கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து உடன் விலகிக்கொள்ள பொன்சேகாவிற்கு ஜனாதிபதி அனுமதி.

* 9 வீதியூடான பயணிகள் போக்குவரத்து நடைமுறைவிதிகள் தளர்வு. * மகசின் சிறையில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகளிடையில் மோதல்.

16 * ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு. ஜனாதிபதியை சந்தித்து பிரியாவிடைபெற்றார்.

* கூட்டுப்படைகளின் பதில் பிரதானியாக விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமிப்பு. 17 * .நாவின் மனிதாபிமான பணிகளுக்கான உதவிஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை விஜயம். 18* யாழ்.குடாநாட்டிலிந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி நீக்கம்.

20 * இராணுவ நலத்திட்ட அதிகாரசபையின் தலைவர் பதவியிலிருந்து அனோமா பொன்சேகா (ஜெனரல்பொன்சேகாவின் பாரியார்) ராஜினாமா.

21 * வவுனியா நலன்புரி நிலையத்திற்கு ஐனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ விஜயம். 22 * ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை.

23 * லங்கா பத்திரிகை ஆசிரியரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை.

* இலங்கையின் புதிய இந்தியத் தூதுவராக அசோக்கே.காந்த் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம். 24 * படகுகளில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 142 இலங்கையர் கைது.

25 * இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் யாழ்ப்பாணம் விஜயம்.

26 * நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த காலி முகத்திடல் வீதிமக்கள் பாவனைக்கு திறப்பு. * பொது வேட்பாளர் பொன்சேகாவிற்கு சுதந்திரக்கட்சிமக்கள் பிரிவு ஆதரவு.

* ஊடகவியலாளர் திஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு ஒபாமா கடிதம்.

29 * அன்னப்பறவைச் சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.

டிசம்பர்.

01 * வவுனியா நலன்புரி முகாமிலுள்ள மக்கள் வெளியே சென்று வருவதற்கு அனுமதி. * புலிகளின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதுடன் 600 வங்கிக் கணக்குகளையும் அரசுடை மையாக்க நடவடிக்கை என்கிறது அரசாங்கம். 03 * ஐனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேசகாவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவிப்பு. 05 * இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் விசாரணை நடைபெறும் என அறிவிப்பு.

* .தே.. வின் 64 ஆவது வருடாந்த மாநாடு.

06 * காலி சிவன் கோவிலில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான 17 விக்கிரகங்கள் கொள்ளை.

07 * .தே.கட்சியை சேர்ந்த எஸ்.பி. திஸாநாயக்க ஸ்ரீ.சு.கட்சியுடன் இணைவு.

09 * வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி முகாமிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம்.

10 * ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழ் மக்களுக்கு சம

உரிமை வழங்கும் வகையில் சட்டதிருத்தம். இந்தியாவிடம் இலங்கை உறுதி.

14 * வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின் போதுசேவையாற்றிய இராணுவ வீரர்கள் கௌரவிப்பு. 14 * ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கைச் சாத்து.

* கிழக் கில் தொடர்மழையால் பெரு வெள்ளம். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்பு. 16 * இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷவை சந்திப்பு.

17 * ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அர்ஜுணரணதுங்க எம்.பி. ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு.

* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத்பொன்சேகா உட்பட 22 பேர் தேர்தல் களத்தில் குதிப்பு.

21 * புலிகளுக்கு சொந்தமான ஆயுதக்கப்பலான பிரின்ஸ்ஸஸ் கிரிஸ்டினாகடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

22 * ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்.

27 * நிதி மோசடி குற்றச்சாட்டில் தம்பர அமிலதேரர் கைது.

0 Responses to 2009 ல் இலங்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com