இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா.செயலா ளர் பான் கீ மூன் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நா. செயலரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இவ்வாறான குழுவொன்றின் நியமனம் ஆனது அதற்கு எதிராக இலங்கையை அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கை எடுப்பதற்குத் தள்ளும் செயல் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலப் பகுதியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில் தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.
இலங்கை யில் போர் உச்சக்கட்டத்தை அடை ந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலி களாலும் போர்க் காலக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பில் பான் கீ மூன் குறிப்பிடத்தக்க அளவு மென்மையான இராஜதந்திரப் போக்கைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தினர் நிராயுத பாணிகளாக உள்ளவர்களைச் சுட்டுக் கொல்வதாக வெளி யாகிய வீடியோக் கட்சிகள் குறித்துப் பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டத்திற்குப் புறம்பான கொலைச் சம்பவங்கள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் கோரிக்கை விடுத்திருந்த போது, அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுவதாக ஐ.நா. செயலர் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. செயலர் பான் கீ மூன் இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அறி வித்த கையோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஐ.நா. செயலரின் இத் திட்டம் நியாயமற்றது எனவும் எது வித அடிப்படையற்றது எனவும் விமர்சித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் போரினால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினாலுமே சுமத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு துறை செயலகத்தினால் கடந்த ஒக்டோபரில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழு வொன்று ஆராய்ந்து கொண் டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப் தங்கள் நீடித்த இனப்பிரச்சினை போல் இங்கு மனித உரிமைகளுக் குப் பெரும் சாபக்கேடாகியுள்ள நிலையில் இப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசுகளைப் போலவே அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுகின்றது.
இலங்கையில் இடம்பெற்றிருக் கக் கூடிய போர்க் காலக் குற்றங்கள் தொடர்பில் பதில் அளிக்கக் கூடிய வகையில் அரசாங்கம் நட வடிக்கை எடுக்கும் என ஐ.நாவும், இலங்கை அரசும் கடந்த மே மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதன்படி செயற்படவில்லை என இலங்கை அரசு மீது விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வலம்புரி



0 Responses to பான் கீ மூன் நியாயமின்றி தலையிடுகின்றார்: மகிந்த சீற்றம்