இலங்கையிலிருந்து பிரித்தானியாவிலுள்ள தனக்கு நெருக்கமான சிலருடன் தொலைபேசியில் அண்மையில் தொடர்புகொண்டுள்ள கே.பி. தன்னைத் தவறாக உணர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவிப்பதும், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதே தனது நோக்கம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதும் தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தன்னை நன்கு பராமரித்துவருவதாகவும் தான் மிகவும் ஆடம்பரமான இடத்தில் சகல வசதிகளுடன் இருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வெளியில் செல்ல சொகுசு வாகனமும் பாதுகாப்பும் தன்வசம் இருப்பதாகவும் முன்னரைவிட அச்சமின்றி தான் வசிப்பதாகவும் கே.பி. கூறியுள்ளார்.



0 Responses to தேர்தல் பணிகளில் கே.பி. மும்முரமாக ஈடுபட்டுள்ளார்: சிங்கள இணையம்