இன்று காலையில் Villaines-en-Duemois என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 10 பேர் வரையில் இணைந்து நடப்பதுடன், இதுவரை 6 கிலோமீற்றர்கள் அவர்கள் நடந்துள்ளனர். Dijonநோக்கி இவர்கள் நடந்து செல்லுகின்றனர்.
நேற்று 43 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 60 பேர் வரையில் இணைந்து நடந்திருந்தனர். இவர்களில் இளையோர்கள் பலர் காணப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் 43 கிலோமீற்றர்களும் முழுமையாக நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரிஸ் நகரில் இருந்து 260 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் சிவந்தன் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.






மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் அதிகளவில் இணையும் இளையோர்கள்