Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் .நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடை பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று தனது இலக்கினை அடைந்து விட்டார்.

இன்று மதியம் பிரான்ஸ் எல்லையில் இருந்து சுமார் 1.30 மணியளவில் சிவந்தனும், சுவிஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக நடை பயணத்தை மேற்கொண்ட 3 இளைஞர்களும் ஒன்றிணைந்தனர்.

அவர்களோடு அங்கு குழுமி இருந்த தமிழ் மக்களோடு சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்து மதியம் 2.30 மணியளவில் .நா முன்றலுக்கு பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் முருகதாசின் தாய் தந்தையரால், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, முருகதாஸ் தன்னை மாய்த்துக்கொண்ட இடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற அந்நிகழ்வில் .நா அதிகாரிகளிடம் சிவந்தன் உட்பட மேலும் நால்வர் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.





மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to சோர்ந்து கிடந்த எம் புலம்பெயர் மக்களை மீண்டும் பேரெழுச்சிக்கு உள்ளாக்கிய சிவந்தனின் இறுதி நாள் நடை பயணம் (படங்கள் இணைப்பு)

  1. Unknown Says:
  2. sorthu kidaththa empulampeyar makkalai thatti usippiya un nadi payanam ulagam muluvathumulla namathu tamil uravukalai manathilum ethirelikka vendum.

    "enni thuniga garmam thuniththapin ennuvam enpathu elukku"

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com