Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நூரன்பேர்க் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 23.07.2011 அன்று காலை 9.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.

இதில் SPD கட்சியின் முக்கிய பிரமுகர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கி கௌரவித்தர். இவருக்கு மலர் செண்டு கொடுத்து வரவேற்றதுடன் சனல் 4 தெலைக்காட்சியின் ஆவணப்படமான போர்க் குற்றவியல் இறுவெட்டும் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. இதில் வுஸ்பேர்க்இகுன்சன்கவுசன்இறேகன்ஸ்பேர்க் மற்றும் கிர்க்கைம்; (Kirchheim) மக்கள் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிகளை குவித்து விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

மேலும் உதைபந்தாட்ட போட்டிகளும் நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் யாவும் இனிதே மாலை 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.





0 Responses to யேர்மனி நூறன்பேர்க் நகரில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப போட்டி (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com