சிரியாவில், அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத்தாக்குதலில் 10 அப்பாவி சிறுவர்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான வீடியோ பதிவொன்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பார்ப்பவர்களை மனமுருக செய்துள்ளது. அண்மைக்காலமாக சிரிய அரச படைகள் சட்டவிரோதமாக கிளஸ்டர் நச்சுக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கிளஸ்டர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் உட்பட நேற்று ஞாயிற்றுக்கிழமை மோதல்களில் மொத்தம் 117 பேர் கொல்லபப்ட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத உள்ளூர் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அரச படைகள் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு விமான தாக்குதல் நடத்தியதாக பின்னர் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.




0 Responses to சிரிய அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 10 சிறுவர்கள் பலி?