Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது இரண்டு பாம்புக்களும் பல நாட்களாக உணவின்றி இறக்க நேரிட்டுள்ளதாக பாம்பு பெண் என்ற நிரோசா விமலரட்ன தெரிவித்துள்ளார்.
சவூதியை சேர்ந்த தமது ஆண் நண்பரால், வெல்லம்பிட்டிய பகுதி வீடொன்றில் சிறைவைக்கப்பட்ட தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக நிரோசா குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்ட தாம் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாகவும் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள தமது இரண்டு பாம்புகளுக்கும் உணவு இல்லாமல் அவை சாகக்கூடும் என்று நிரோசா அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனவே பொலிஸார் வீட்டில் உள்ள பாம்புகளை மீட்க வேண்டும் என்று கோரியுள்ள நிரோசா, தம்மை தாக்கிய சவூதியின் தமது ஆண் நண்பரை கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

0 Responses to உணவின்றி எனது இரண்டு பாம்புகளும் இறக்கப் போகின்றன!- காப்பாற்றுமாறு பாம்புப் பெண் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com