Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவசேனா கட்சியின் புதிய தலைவராக பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே முறைப்படி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்றைய தினம் பால் தாக்கரேயின் பிறந்த தினம் என்பதால், அவர் பொறுப்பேற்று கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சிவசேனா பவனில் நடைபெற்ற நிகழ்வ்சில் உத்தவ் தாக்கரே கட்சி தலைவராக பதவியேற்றுக்கொண்டதுடன், பால் தக்கரேயின் பிறந்த தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிவசே னை கட்சி உறுப்பினர்கள், பெண்கள் பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ளும் வகையிலான சீன நாட்டு மடக்கு கத்திகளை இலவசமாக விநியோகம் செய்தனர்.

பெண்கள் தங்கள் கைப்பைகளில் லிப்ஸ்டிக்கை வைத்து கொள்வதை காட்டிலும் கத்தியை வைத்து கொள்ல வேண்டும் என பால் தாக்கரே கூறியிருந்ததை நினைவுபடுத்தி இவ்வாறு கத்தி வழங்கப்பட்டுள்ளதாம்.

0 Responses to சிவசேனா கட்சியின் புதிய தலைவராக இன்று உத்தவ் தாக்கரே பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com