தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக கூட்டமும் -
மறைந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் மருத்துவர் நவமசிவாயம் சத்தியமூர்த்தி
அவர்களுக்கான வணக்க நிழகழ்வும் ஓரு அரங்கு இரு நிகழ்வாக ஜேர்மனியின் போகும்
மாநாகரில் இடம்பெறுகின்றது.
முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக்கொத்தும்- தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதற்கான அவசியம் குறித்த கையேடும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது.
இதேவேளை மருத்துவர் நவமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கான வணக்க நிழ்வும் இடமபெறுகின்றது. நாளை மாலை 3 மணிக்கு Wallbaumweg 108 / 44894 Bochum-Langendreer எனும் முகவரியில் இந்ந நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபை கூட்டத் தொடரினை மையமாக கொண்டு சிறிலங்கா தொடர்பில் உடனடி அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தும் தபால் அட்டைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஏலவே தென்னாபிரிக்க மற்றும் பாலஸ்த்தீன விடுதலை சாசனங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும் மக்கள் தமது விடுதலை வேட்கையினை அனைத்துலகிற்கும் முரசறைவித்து, அனைத்துலக மக்களதும், அரசுகளதும் ஆதரவினைத் தமது விடுதலைப் போராட்டத்துக்கு வென்றெடுக்கும் வகையில் சுதந்திர சாசனத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனமானது அமையவிருக்கும் எதிர்கால தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலக அரங்கிற்கு முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக்கொத்தும்- தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதற்கான அவசியம் குறித்த கையேடும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது.
இதேவேளை மருத்துவர் நவமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கான வணக்க நிழ்வும் இடமபெறுகின்றது. நாளை மாலை 3 மணிக்கு Wallbaumweg 108 / 44894 Bochum-Langendreer எனும் முகவரியில் இந்ந நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபை கூட்டத் தொடரினை மையமாக கொண்டு சிறிலங்கா தொடர்பில் உடனடி அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தும் தபால் அட்டைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஏலவே தென்னாபிரிக்க மற்றும் பாலஸ்த்தீன விடுதலை சாசனங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும் மக்கள் தமது விடுதலை வேட்கையினை அனைத்துலகிற்கும் முரசறைவித்து, அனைத்துலக மக்களதும், அரசுகளதும் ஆதரவினைத் தமது விடுதலைப் போராட்டத்துக்கு வென்றெடுக்கும் வகையில் சுதந்திர சாசனத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனமானது அமையவிருக்கும் எதிர்கால தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலக அரங்கிற்கு முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Responses to ஜேர்மனியில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான அறிமுக அரங்கமும் - மருத்துவர் சத்தியமூர்த்தியின் வணக்க நிகழ்வும்