Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும்- அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

ஆனாலும், அவற்றை வழங்கினால் வடக்கு தனித்த அரசின் கீழ் இயங்கும் நிலைக்கு செல்லும் அச்சுறுத்தல் உள்ளது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார். நாட்டை எந்தவொரு சந்திப்பத்திலும் பிரித்து வேறுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது. அதை அரசாங்கம் பார்த்துக் கொண்டும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பளையில் இடம்பெற்ற மத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் டி.எம்.ஜயரட்ண மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினதும்- கட்சிகளினதும் கோரிக்கைகளை பரிசீலிக்க தயாராக இருக்கிறது. ஆனால், நாட்டை துண்டாடுவதற்கான அனுமதியை என்றைக்கும் வழங்காது. அத்தோடு, எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வடக்கு தேர்தல் நாட்டை பாதுகாப்பதா அல்லது துண்டாடுவதா என்பதை உணர்ந்துவதாக அமையும் வாய்ப்புக்கள் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காணி,பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாணத்துக்கு வழங்கினால்,அது தனித்த அரசை உருவாக்கிவிடும்:பிரதமர் டி.எம்.ஜயரட்ண

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com