இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் வலியுறுத்தப்படவுள்ளது. இது தொடர்பான பிரேரணை ஒன்று நாளைய தினம் வடமாகாண சபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதன்படி 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பாரிய இனப்படுகொலையும், யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளன.
யுத்தம் நிறைவடைந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது தொடர்பான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி நாளைய தினம் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதன்படி 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பாரிய இனப்படுகொலையும், யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளன.
யுத்தம் நிறைவடைந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது தொடர்பான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி நாளைய தினம் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.




0 Responses to சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை தேவை! வடமாகாணசபையில் நாளை பிரேரணை?