முன்னைய ஆட்சிக் காலத்தில் நாட்டின் மொத்தத் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும், அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்து வந்ததாக அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் முழு வரி வருமானத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அவர், உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துள்ளது.
எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன. வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளன. கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப்பட்டது. 100ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபு படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும்” என்றுள்ளார்.
நாட்டின் முழு வரி வருமானத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அவர், உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துள்ளது.
எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன. வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளன. கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப்பட்டது. 100ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபு படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும்” என்றுள்ளார்.




0 Responses to நாட்டின் மொத்த வருமானத்தில் 81 வீதத்தை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது: சம்பிக்க ரணவக்க