Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தயாராக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படை சிறைப் பிடித்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தயார் நிலையில் உள்ளது என்று, அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் தங்களது படகுகளைப்பெற உரிய ஆவணங்களுடன் இலங்கைக்கு வர வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதுக்குறித்து தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள் இலங்கைக்கு செல்ல தங்களிடம் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் தமிழக அரசே எங்களது படகுகளை மீட்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு இந்திய கப்பற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ள இலங்கை மீனவர்களின் படகுகளை அவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று, இலங்கை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தயார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com