Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி அறிவுரை தேவையில்லை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினத்தில் கலந்துக்கொள்ள கோவை சென்றிருந்த பாஜகவின் மக்களவை உறுப்பினர் பொன்.ராதா கிருஷ்ணன், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் அறிவுரை தேவையில்லை என்றும், ஏற்கனவே மத்திய அரசு இந்தப் பணிகளை செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்தியா வரும் இலங்கை அதிபர் மைத்ரி ஸ்ரிசெனவுடன் இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதோடு இலங்கைத் தமிழர்களை விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். ஐநாவில் இலங்கையில் நடைப்பெற்ற போர்குற்றம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தை இந்தியா ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், இந்தியா வரும் மைத்ரி ஸ்ரிசெனவுடன் இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி அறிவுரை தேவையில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com