ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு ஆறு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ‘வெலே’ சுதா வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் இதன்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ‘வெலே’ சுதா வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் இதன்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




0 Responses to போதைப்பொருள் வர்த்தகத் தொடர்பு துமிந்த சில்வாவிடம் விசாரணை!