Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி சட்டபேரவைத் தேர்தல் தோல்விக்கு பாஜக கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, படுத்தோல்வியை சந்தித்துள்ளது.டெல்லி தேர்தல் தோல்வி மோடிக்கு கிடைத்த தோல்வி என்று கூறியுள்ள அன்னா ஹசாரே, பாஜகவின் செயல்பாடுகள் மக்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே கசந்துவிட்டன என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ஆம் ஆத்மி வெற்றிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்ற நிலையில் அன்னா ஹசாரேவைத் தொடர்புக்கொண்டபோது, அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும்,பாஜகவின் தோல்விக்கு கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது என்றும், ஹசாரே கூறியுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாஜக தோல்விக்கு கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது: அன்னா ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com