Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச, இலஞ்ச- ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவங்ச மீது இலஞ்ச, ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடொன்றை அடுத்தே அவர் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.

இதனிடையே, சதிகாரர்கள் தனக்கெதிராக முன்வைத்த முறைப்பாடுகளுக்கமைய தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின் முடிவில் விமல் வீரவங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to விமல் வீரவங்ச இலஞ்ச- ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவினால் 5 மணிநேரம் விசாரணை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com