Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வரும் இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா தொடர்ச்சியாக உதவ வேண்டும் என்று பிரதானமாக வலியுறுத்தவுள்ளோம். அத்தோடு, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளில் விடுதலை, வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எதிர்நோக்கும் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு விளக்கமளிக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை வரும் மோடியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் பேசுவோம்: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com